Tuesday, July 8, 2014

இறைவன் உய்யும் இசை

   நான் அடிப்படையிலேயே கொஞ்சம் இளையராஜா கிறுக்குதான். ஆனால் இந்த இசைக்கோவையை நான் சிலாகிப்பதற்கு நிச்சயம் அந்த கிறுக்கு மட்டும் காரணம் கிடையாது. ஏனெனில் முதல் முறை இதை கேட்டு மயங்கிய போது இது இளையராஜாவின் இசை என்பது தெரியாது. இதனை ஒருமுறை கேட்டு பாருங்கள். இறைவனை உணர்வீர்கள். இந்த இசையின் வகை, அதன் அடிப்படை Genre என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால்,  முழுதும் கேட்டு முடித்த பின்பு நான் அடைந்த நிலையை நிச்சயம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அனுபவித்து உணர மட்டுமே முடியும்.

    இதனை ஒரு purposeless இசை எனக்கூறலாம். சினிமா பாடல்களை போல ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது இல்லை என நினைக்கிறேன். ஆனால் ஒருவிதமான spritual haunting இருக்கிறது. நிச்சயம் இது ஆன்மாவுக்கான இசைதான். போழுபோக்குக்காக மட்டும் இசையைக் கேட்பவர்களுக்கு பிடிக்குமா என தெரியவில்லை. நான் ஒன்றும் இசையை பிரித்துபோட்டு மேய்பவன் அல்ல என்றாலும், இந்த இசைக்கோவை ஏனோ முதல்முறையே எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

  பொதுவாகவே நுண்கலைகள் எல்லாம் மிக சிக்கலானவை. யாரும் யாருக்கும் ஊட்டிவிட முடியாது என்பது எனது எண்ணம். அதுவும் இசை ரசனை தனி நபரின் விருப்பம் சார்ந்ததுவே. இருந்தாலும் எதற்கும் ஒரு முறை இதை கேட்டுப் பார்த்து சொல்லுங்கள்.

இசைத்தொகுப்பு - "HOW TO NAME IT"
இசைக்கோவை   - "STUDY FOR VIOLIN"

அன்புடன்
முத்துராம் ஸ்ரீனிவாசன்  

No comments:

Post a Comment