நவம்பர் 9 ஆம் தேதி கிருஹப்பிரவேசம் செய்து விட்டோம். ஒரு கல்யாணத்திற்கு சற்றும் குறைவில்லாத மகிழ்ச்சியும், பரபரப்பும் இருந்தது உண்மை. ஆனால் ஒரே ஒரு வருத்தம், சாப்பாடு விஷயம் ஒரு "Mega Flop". மற்ற எல்லா சடங்குகளும் நிறைவாக இருந்தாலும் சாப்பாடு சரி இல்லாமல் போனதில் மனம் மிகவும் சங்கடப்பட்டுப் போனது.
வழக்கமாக நான் மிகவும் கவனமாக இருக்கும் விஷயம். இந்த முறை நட்பின் காரணமாக சறுக்கி விட்டேன். எனது நண்பர் ஒருவர்தான் சாப்பாடு சப்ளை செய்தார். ஒரு மாதத்திற்கு முன்பு நான் விஷேசத்திற்கு அழைப்பதற்காக தொலைபேசியில் கூப்பிட்டபோதே சொல்லிவிட்டார். கிட்டத்தட்ட அன்பு கட்டளைதான். நானும் வேறு யாரையோ அமர்த்துவதற்கு பதில் நம் பின்னணி தெரிந்த (வீட்டில் எல்லோருக்கும் நாக்கு நான்கு அடி நீளம்) ஒருவரால் சிறப்பாக செய்ய முடியும் என்று நினைத்தேன். அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. இவ்வளவுக்கும் நான் எந்த பேரமும் செய்ய நினைக்க கூட இல்லை. சமையல் பிரமாதமாய் இருக்க வேண்டும், பட்ஜெட் பற்றி கவலைப் பட வேண்டாம் என்று கறாராய் சொல்லி இருந்தேன்.
முதல் நாளே சுற்றமும், நட்புகளும் வரத்தொடங்கி விட்டனர். உண்மையிலேயே நான் அத்தனை பேரை எதிர்பார்க்கவில்லை. ஒருவழியாக அனைவரும் தங்க, தூங்க, சாப்பிட ஏற்பாடு செய்து விட்டு மறுநாள் நடக்கப்போகும் விழா ஏற்பாடுகளை மும்முரமாக கவனித்துக்கொண்டு இருந்தேன். இரவு நெடு நேரம் ஆகிவிட்டதால் புது வீட்டிலேயே தங்கி விட்டேன். வந்த விருந்தினர்கள் அனைவரும் இப்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டிலும், என் தம்பியின் வீட்டிலும் இருந்தார்கள்.
மறுநாள் அதிகாலை பிரம்ஹ முஹூர்த்ததில் தான் ஹோமம் என்பதால் அனைவருக்கும் கார்கள் ஏற்பாடு செய்து புது வீட்டிற்கு அழைத்து வரும் ஒருங்கிணைப்பு பணியை என் தம்பியும், மனைவியும் எடுத்துக்கொண்டார்கள்.
வழக்கமாக நான் மிகவும் கவனமாக இருக்கும் விஷயம். இந்த முறை நட்பின் காரணமாக சறுக்கி விட்டேன். எனது நண்பர் ஒருவர்தான் சாப்பாடு சப்ளை செய்தார். ஒரு மாதத்திற்கு முன்பு நான் விஷேசத்திற்கு அழைப்பதற்காக தொலைபேசியில் கூப்பிட்டபோதே சொல்லிவிட்டார். கிட்டத்தட்ட அன்பு கட்டளைதான். நானும் வேறு யாரையோ அமர்த்துவதற்கு பதில் நம் பின்னணி தெரிந்த (வீட்டில் எல்லோருக்கும் நாக்கு நான்கு அடி நீளம்) ஒருவரால் சிறப்பாக செய்ய முடியும் என்று நினைத்தேன். அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. இவ்வளவுக்கும் நான் எந்த பேரமும் செய்ய நினைக்க கூட இல்லை. சமையல் பிரமாதமாய் இருக்க வேண்டும், பட்ஜெட் பற்றி கவலைப் பட வேண்டாம் என்று கறாராய் சொல்லி இருந்தேன்.
முதல் நாளே சுற்றமும், நட்புகளும் வரத்தொடங்கி விட்டனர். உண்மையிலேயே நான் அத்தனை பேரை எதிர்பார்க்கவில்லை. ஒருவழியாக அனைவரும் தங்க, தூங்க, சாப்பிட ஏற்பாடு செய்து விட்டு மறுநாள் நடக்கப்போகும் விழா ஏற்பாடுகளை மும்முரமாக கவனித்துக்கொண்டு இருந்தேன். இரவு நெடு நேரம் ஆகிவிட்டதால் புது வீட்டிலேயே தங்கி விட்டேன். வந்த விருந்தினர்கள் அனைவரும் இப்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டிலும், என் தம்பியின் வீட்டிலும் இருந்தார்கள்.
மறுநாள் அதிகாலை பிரம்ஹ முஹூர்த்ததில் தான் ஹோமம் என்பதால் அனைவருக்கும் கார்கள் ஏற்பாடு செய்து புது வீட்டிற்கு அழைத்து வரும் ஒருங்கிணைப்பு பணியை என் தம்பியும், மனைவியும் எடுத்துக்கொண்டார்கள்.
ஹோமம்
9ஆம் தேதி அதிகாலை எல்லாம் கச்சிதமாக நடந்தது. பூஜை, புனஷ்காரங்கள் எல்லாம் முடிந்து பெரியவர்கள் ஒவ்வொருவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி முடிக்க காலை எட்டு மணி ஆகிவிட்டது. பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்தது. சாப்பிட பந்திக்கு சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது பாவம் இந்த மக்கள் என்று.
அந்த பசியிலும் கூட தொண்டையில் இறங்க மறுத்தது அந்த இட்லியும், பொங்கலும்.
பூரி மட்டுமே சுமார் என்ற அளவுக்கு இருந்தது.சமையல்நண்பருக்கு கால் செய்து விஷயத்தை சொன்னேன். அவர் வேறொரு பெரிய வீட்டு விசேஷத்தில் மாட்டிக் கொண்டதால் தன்னால் வர முடியவில்லை என்றும் தனது மேனேஜரிடம் தான் பேசுவதாகவும் நடந்தவைகளுக்கு வருந்துவதாகவும் கூறினார், வந்திருந்த அனைவரிடமும் சாஷ்டாங்கமாய் விழுந்து மன்னிப்புதான் கேட்டிருக்க வேண்டும். இருந்தாலும் எனது சொந்தங்கள் என்னைக் கைவிடவில்லை. இருந்ததை சாப்பிட்டுக் கொண்டார்கள்.
சரி இதுதான் தொலைந்து போகட்டும். மதியச்சாப்பாட்டுக்கும் இவனை நம்பி மோசம் போகவேண்டாம் என்று அப்போதாவது தோன்றி இருக்க வேண்டும். என்ன செய்வது? எனது விதி (வந்த விருந்தினர்களின் விதியும் தான்) வலியதாக இருந்திருக்கிறதே. கேட்டரிங் மேனேஜரை கூப்பிட்டு "இங்கே பாருங்க காலைல எவ்ளோ கஷ்டம் ஆகிடிச்சுன்னு நீங்களே பாத்தீங்க. மதியம் சாப்பாடு இந்த கெட்ட பேரை மாத்துற மாறி இருக்கணும்" என்று எச்சரித்து மட்டும் அனுப்பினேன். இது ஒரு குற்றமாயா?
அதுக்கு வெச்சான் பாரு ஆப்பு. மதியம் 12 மணிக்கே எல்லோருக்கும் பசிக்க ஆரம்பித்து விட்டது. ஆளாளுக்கு மாப்ளே சாப்பாடு எப்போ வரும் என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நான் மதியம் 12:00 க்கு கண்டிப்பாக வந்து விடுமாறு முன்பே சொல்லி இருந்தேன். மொபைலில் அழைத்து கேட்ட பொழுது வந்து கொண்டே இருப்பதாகவும் இன்னும் 10 நிமிடத்தில் அங்கு இருப்போம் என்றும் பதில் வந்தது. 1 மணி ஆயிற்று 1:30 ஆயிற்று வந்த பாடு இல்லை. இங்கு ஜனங்கள் கொதித்து கிடந்தார்கள். இதில் முக்கியமான விஷயம் இந்த வீடு ஒரு ஒதுக்கு புறத்தில் அமைந்த "GATED COMMUNITY". ஆகையால் சட்டென்று மாற்று ஏற்பாடு செய்யவோ, இல்லை ஒரு Hotel க்கு கூப்பிட்டு செல்லவோ வாய்ப்பு இல்லை. கார் இருந்தால்தான் பிரதான சாலையில் இருந்து இந்த இடத்துக்கே வர முடியும்.
இந்த பின்னணியில் நடந்த சம்பவங்களை கற்பனை செய்து பாருங்கள். மதியம் மணி 2:30, சரி ஆனது ஆகட்டும் என்று சில பல கார்களை எடுத்துக் கொண்டு சிறு குழுக்களாக ஏதேனும் உணவகத்திற்காவது அழைத்து செல்லலாம் என்று முடிவெடுத்தேன். அதற்கான ஏற்பாட்டை செய்து வெளியேறும் வேளையில் வந்து சேர்ந்ததைய்யா நம்ம சோத்து வண்டி. எனக்கு கண் மண் தெரியாத கோபம்... ஆனாலும் முதன் முதலாக வீட்டில் காலடி எடுத்து வைக்கும் நேரம் எதிர்மறையாக எதுவும் நடந்து விட வேண்டாம் என்று அடக்கிக் கொண்டேன். எல்லோரும் என்னன்னவோ பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். இனிமேல் உணவகங்களிலும் சாப்பாடு இருக்குமா? அதுவும் இத்தனை பேருக்கு? என்ற சந்தேகம் தலை தூக்க இப்போது வந்த உணவையே உண்பது என்று ஒரு வழியாக சமாதானம் ஆனேன்.
ஆனால் அந்த பாவி காலையில் கொடுத்த இட்லி, பொங்கல் மேல் இருந்த வெறுப்பை மதியாச்சாப்பாட்டைக் கொடுத்து மொத்தமாக போக்கி விட்டான். பின்னே பள்ளிக்கூட சத்துணவின் சுவை தோத்தது போங்கள். ஆனால் யாரும் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக உண்டுவிட்டு எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
அதன் பின் அந்த சமையல் நண்பர் என் கண்ணில் மாட்டவில்லை. பணம் வாங்கி கொள்ள சொல்லி அழைத்தாலும் போனை எடுப்பது இல்லை.